சாயல்குடி அருகே தாயார் கொடூர கொலை: குழந்தைகள் கண் முன்னே நடந்த சம்பவம்!

சாயல்குடி அருகே தாயார் கொடூர கொலை: குழந்தைகள் கண் முன்னே நடந்த சம்பவம்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், ஜெர்மின் (வயது 35) என்ற பெண் தனது 14 வயது மகள் நிவேதா பெத்தநாச்சி மற்றும் 10 வயது மகன் திஸ்வர் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கும் இவரது கணவர் விஜயகோபாலுக்கும் இடையே கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து ஆண்டுகளாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்று, ஜெர்மின் தனது குழந்தைகளுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். குழந்தைகளின் கண் முன்னே, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ஜெர்மினை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெர்மின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடிவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்