கமுதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி பேரூராட்சியில்
கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் 8-வது வார்டு வரை உள்ள
பொதுமக்களிடம் இருந்து
மனுக்கள் பெறப்பட்டன.
இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ்,பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேசன், வேலவன்,
திமுக பேரூர் கழக செயலாளர் பாலமுருகன்,
அவைத்தலைவர் லெட்சுமணன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் செய்யது கரிமுல்லா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்
போஸ்செல்வா,கிராம நிர்வாக அலுவலர்கள் தாரணிஅரசி, பூபதி மற்றும்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத் தொகை
பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, தாட்கோ ,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,
தொழிலாளர் நலத்துறை,
பேரூராட்சி, சுகாதாரத் துறை, எரிசக்திதுறை,
தோட்டக்கலை துறை,
சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மனுக்கள்
மொத்தம் 440
பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது.
.

