கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் பம்மனேந்தல், கே.வேப்பங்குளம்,
பாப்பாங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ்குமார், சித்ராதேவி, கோபிநாத், மாலதி, எழில்அரசன்,
செல்லப்பாண்டியன், தாமரைகண்ணன், ராமச்சந்திரன், வீரன் சரண் பிரதீப், ஹேமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 189 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
