பெரம்பலூர் மாவட்டம்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப.,அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப.,அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இன்று (05.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி தூய்மை நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், தூய்மை பணிகள் மற்றும் தூய்மை நடைபயணம் மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், ஒரே நாளில் தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மை நடைப் பயணம் மேற்கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படாத கழிவுகள், காகித குப்பை, நெகிழி கழிவுகள், மின் கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
மேலும், சேகரம் செய்யப்பட்ட கழிவுகள் அனைத்தையும் தரம் பிரித்து அவைகளை எடையிட்டு மறுசுழற்சி கழிவுகளாக விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூய்மை பாரத இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி நிர்மலா ஜோஸ்பின், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வி.வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ரெ.சுரேஷ்குமார், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜபூபதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் திரு.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்