பெரம்பலூர் மாவட்டம்குரும்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம்
குரும்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட, குரும்பலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் . ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (11.06.2025) நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டங்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மூலமாக கிராம ஊராட்சிகளில், மக்களைத் தேடிச் சென்று அப்பகுதி மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று அம்மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், குரும்பலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் பயன்பெற தங்களுடைய ஆண்ட்ராய்டு அலைபேசியில் உழவன் செயலியை தரவிறக்கம் செய்து, அதன் மூலமாகவே விண்ணப்பித்து, பயன்பெறலாம். வருவாய்த்துறை தொடர்பான சான்றுகள், நலத்திட்ட உதவிகள் பெற அருகில் உள்ள இ-சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், பட்டா மாறுதல் தொடர்பாக ‘தமிழ் நிலம்’ அலைபேசி செயலியின் மூலமாக எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க, பதிவேடு, புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நில அளவை வரை படங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் இணையவழி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், ஊராட்சிகள், நகராட்சியின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு, அளவு மாற்றங்கள் போன்ற விவரங்களையும் ‘தமிழ் நிலம்’ செயலியின் மூலமாக அறியலாம். எனவே இதுபோன்ற அரசின் திட்டங்கள் பயன்பெறுவதற்கு ஆண்ட்ராய்டு அலைபேசி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு அரசு வேலைவாய்ப்பு பெறலாம். அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமற்றது. அதற்கு தீர்வு காணும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறைந்த கல்வித்தகுதி மற்றும் தொழில் சார்ந்த பணி மேற்கொள்ளும் நபர்களுக்கு உடனடியான வேலைவாய்ப்பு ஏற்படுத்திடும் விதமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும், மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற தனியார்துறையின் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதி மற்றும் தனித்திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதனை வேலைநாடுவோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மேலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய் துறையின் சார்பில் இணையவழி பட்டா, வீட்டுமனை பட்டா 189 பயனாளிகளுக்கு ரூ.1,52,00,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து உதவித்தொகை என 06 பயனாளிகளுக்கு ரூ.2,15,000 மதிப்பீட்டிலும், 57 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளையும், 30 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சலவைப்பெட்டி 02 பயனாளிகளுக்கு ரூ.13,104 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை 05 பயனாளிகளுக்கு ரூ.1,70,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.8,15,429 மதிப்பீட்டிலும், ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 03 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 35,67,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மின் மோட்டார் 02 பயனாளிகளுக்கு ரூ.2,61,000 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.7,13,253 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலி கருவி 03 பயனாளிகளுக்கு ரூ.8,550 மதிப்பீட்டிலும், மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.20,44,800 மதிப்பீட்டிலும் என மொத்தம் 354 பயனாளிகளுக்கு ரூ.2,32,28,136 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல்,இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் சங்கீதா பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
