திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளரை ஊராட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முதல்வர் முகாமில் கலந்துகொண்டார்…
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருவெள்ளரை ஊராட்சி, JP திருமண மண்டபத்தில் இன்று (30.05.2025) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி, இம்முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.ந.தியாகராஜன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கங்காதாரிணி, அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.