தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரகத்திற்கு உள்பட்டபகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில்2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரகத்திற்கு உள்பட்ட
நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் . சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கடந்த (07.06.2025) கைது செய்தனர். கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் இன்று (09.06.2025) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
