கமுதியில் தீப்பட்டிவேதிப்பொருள் பதுக்கல் குறித்து மத்திய நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மதுரை மண்டல
மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார், மெத்தனால், எத்தனால் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பதுக்கி வைத்திருத்தல், அனுமதியின்றி விற்பனை செய்தல் தொடர்பாக நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கமுதியில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில், மதுவிலக்கு ஆய்வாளர் கண்மணி, மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஆணைக்கினங்க ,மத்திய நுண்ணறிவு காவலர் கோதண்டபாணி மற்றும் மதுவிலக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் இந்த ஆய்வு பணி மேற் கொண்டனர். மேலும் மெத்தனால், எத்தனால் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் பல்வேறு சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பயன்படும் மூலப்பொருட்களை கொள்முதல் செய்து இந்த தீப்பெட்டி தொழிற்சாலை யில் பயன்படுத்தி வருகின்றனர். இதனை முறையாக பயன்படுத்து கின்றனரா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வேதிப்பொருட்கள் சேமித்தல் மட்டும் கையாளுதல் வழிமுறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து
விளக்கமளித்து, அரசின் அனுமதி பெறப்பட்டதா என்று சோதனை செய்தனர். பின்னர் வேதிப்பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்வது மற்றும் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

தொடர்புடைய செய்திகள்