தூத்துக்குடியில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி சாலையில் செயற்கை புல்வெளி விளையாட்டு (Turf) வளாகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி சாலையில் பணிகள் நிறைவுற்ற செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு வளாகத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், நகர துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாமன்றம் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்