உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்றது.
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அவர்கள் தலைமையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள், இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவக்குமார், மருத்துவக்கல்லூரி துணை தலைவர் கலைவாணி, உறைவிடம் மருத்துவ அலுவலர் சைல்ட்ஸ் ஜெயமணி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி, செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டன
