சேலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் இன்று (17.06.2025) நடைபெற்றது.

சேலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் இன்று (17.06.2025) நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் பார்வையிட்டார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் திரு.ஆ. இராமச்சந்திரன், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப. குமரேஸ்வரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு.ராஜ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி ம.வாணி ஈஸ்வரி, மாநகராட்சி துணை மேயர் திருமதி மா. சாரதாதேவி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்