கருப்பட்டி சீசன் துவங்கியுள்ளது…

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, மாரியூர், கன்னிராஜபுரம், மேலக்கிடாரம், பனைக்குளம், முத்துபேட்டை, அழகன்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி வெளி மார்க்கெட்டில் ரூ.280 முதல் ரூ.300 விற்கின்றனர்.

சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது:
பனை மரத்தில் பதனீர் இறக்கி குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு கலந்து பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். ஏப். முதல் ஜூலை வரை சீசன். ஆனால் சர்க்கரை கலந்த கருப்பட்டி ஆதிக்கம் காரணமாக மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால் எதிர்பார்த்த விலையின்றி முதலீட்டை இழந்து வாங்கிய கடனை அடைக்க சிரமப்படுகிறோம். சீசன் இல்லாத போது கிலோ ரூ.300க்கு விலைபோகும். நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் போலி கருப்படி கிலோ ரூ.150 முதல் ரூ.200க்கு விற்கின்றனர். எனவே கலப்பட கருப்பட்டியை ஒழிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்