காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக…

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு நான்கு சக்கர வாகனங்களை வழங்கினார்கள். முதற்கட்டமாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகர், உச்சிப்புளி, சாயல்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்