நேரடியாக வகுப்புகளை நடத்தக் கோரிய டெல்லி பெற்றோர்கள் மனு நிராகரிப்பு

புதுடெல்லி: இணைய வகுப்புகளுக்குப் பதில் பள்ளிக்கூடங்களில் நேரடியாக வகுப்புகளை நடத்த டெல்லியில் உள்ள பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தேசியத் தலைநகர் டெல்லியில் ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன.

இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டுமின்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இதனைத் தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் இணையம் வாயிலாகப் பாடங்களை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்தக் கோரி பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை ஏற்க வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் பள்ளிகளுக்கான வகுப்புகள் இணையம் வாயிலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *