பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை பயன்பாட்டிற்காக…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னீட்டு விழா அரங்கு அமைப்பதற்கான பூமி பூஜை செய்து முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆப., இன்று (18.04.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்.இ.ஆ.ப., நகரப் பொறியாளர் சிவபாதம், மாவிட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.