நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (18.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இற்றிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பீரதீப் குமார்.இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் காமினீ,இ.கா.ப., மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்,இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் அருள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பி.அன்பரசி, நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்