பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவிற்கிணங்க,பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 15.07.2025 அன்று முதல் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக இன்று (07.08.2025) ஊரகப் பகுதிகளுக்கான முகாம் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலப் பள்ளியிலும், நகர்ப்புற பகுதிகளுக்கான முகாம் துறைமங்கலம் ஜே.கே.திருமண மஹாலிலும் நடைபெற்றது. இதில் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஊரக பகுதிகளில் 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 சேவைகளையும், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகள் பங்கேற்று 43 சேவைகளையும் நேரடியாக வழங்கி வருகிறது, மேலும் இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கப்படும் அனைத்து மனுக்களும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு , பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இதுவரை 30 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டு முகாம்களிலும் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 1,625 மனுக்கள் அளித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோல நகர்ப்புறபகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
துறைமங்கலம் ஜே.கே.திருமண மஹாலில் நடைபெற்றதை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வுகளில், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அறிவழகன், அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்