சேலம் மாநகர பகுதிகளில் உள்ள சைன்டிபிக், சர்ஜிகல் மற்றும் வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோதமாக மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் ஆய்வு

சேலம் மாவட்டம்,காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம் அவர்களின் உத்தரவின் பேரிலும், காவல் கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு அவர்களின் அறிவுரையின் படியும் சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.R.நந்தகுமார் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து சேலம் மாநகர பகுதிகளில் உள்ள சைன்டிபிக், சர்ஜிகல் மற்றும் வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோதமாக மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டும். சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது

தொடர்புடைய செய்திகள்