போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.88 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை, கீழப்புலியூர், சிறுகுடல், கே.புதூர், முருக்கன்குடி, பெருமத்தூர், பெ.குடிகாடு, ந.கிளியூர், நன்னை, பென்னகோணம், கழனிவாசல், ஒகளூர், புதுப்பேட்டை, அத்தியூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (18.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., தலைமையில், ரூ.11.88 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவய்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை திட்டங்களாக வழங்கி வருகின்றார்.
இன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திருமாந்துறை, அத்தியூர் மற்றும் நன்னை ஊராட்சிகளில் தலா ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடங்கள் கட்டும் பணி, ரூ.13.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணி, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி, அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டையில் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும் பணி, ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ஊராட்சி பொது நிதியின் கீழ் திருமாந்துறை ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 47 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, ஆதிதிராவிடர் புதுத் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 50 எண்ணிக்கையில் வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கும் பணி, ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு முதல் ஓ.எச்.டி டேங்க் வரை மெயின் பைப் லைன், மோட்டார் மற்றும் வயரிங் அமைக்கும் பணி, ரூ.2.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒ.எச்.டி க்கு பைப்லைன் அமைக்கும் பணி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மெயின் பைப்லைன், மோட்டார் மற்றும் வயரிங் பணிகள், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மெயின் பைப் லைன் அமைக்கும் பணி, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கே.புதூர் கிராமத்தில் கே.புதூர் சாலை முதல் நமையூர் சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பெருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எறையூர் – நன்னை சாலை முதல் நல்லூர் சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி,
கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் சிறுகுடல், பெருமத்தூர் குடிக்காடு, பென்னக்கோணம், கழனிவாசல் மற்றும் ஓகளுர், அத்தியூர் ஆதிதிராவிடர் பகுதி ஆகிய பகுதிகளில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் நன்னை ஊராட்சி கிளியூர் கிராமத்தில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பைப் லைன் அமைத்து 30 எண்ணிக்கையில் வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கும் பணி, நன்னை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ.2.15 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணி, ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நன்னையில் தார் சாலை அமைக்கும் பணி, ஓகளுர் ஊராட்சி காந்தி நகரில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 50 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருமாந்துறை கிராமத்தில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி, ரூ5.92 லட்சம் மதிப்பீட்டில் சிறுகுடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.165.14 லட்சம் மதிப்பீட்டில் தேவையூர் – செந்துறை சாலையை பலப்படுத்தும் பணி, சிறுபாசன ஏரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரியை புனரமைக்கும் பணி, நன்னை கிராமத்தில் ரூ.46.51 லட்சம் மதிப்பீட்டில் தக்கன் ஏரியை புனரமைக்கும் பணி,
அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் ஆதிதிராவிடர் மயானத்திற்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சிறுகூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணினி வகுப்பறை கட்டும் பணி, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முருக்கன்குடி முதல் காருகுடி வரை ரூ.106.57 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, மூலதன முதலீட்டு சிறப்பு திட்டத்தின் கீழ் பென்னகோணம் ஊராட்சியில் ரூ.272.50 லட்சம் மதிப்பீட்டில் பென்னகோணம் – பெருமத்தூர் சாலையை பலப்படுத்தும் பணி என மொத்தம் ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் கிளியூர் கிராமத்தில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நன்னை கிராமத்தில் ரூ.29.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லி கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் பண்ணை கட்டிடம், அயோத்திதாசப் பண்டித குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நன்னை ஊராட்சியில் ரூ.7.54 லட்சம் மதிப்பீட்டில் வேப்பூர் சாலை முதல் மாரியம்மன் கோவில் வரை அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.83.13 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கடந்த நான்காண்டுகளில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்துரைசாமி, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் வட்டாட்சியர் திரு.சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்