பெரம்பலூர்மாவட்டம்முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்., இ.ஆ.ப., பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மாவட்ட விளையாட்டு அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்., இ.ஆ.ப., பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்ம.பிரபாகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் , இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், அவர்களுக்குள் உள்ள விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்திடவும், மாணவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கபடி, கையுந்துபந்து மற்றும் கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான 35 வயதிற்குட்பட்ட பொதுப் பிரிவு ஆண்களுக்கு கபாடி, கையுந்துபந்து மற்றும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் ஆண்கள் கபடி பிரிவில் முதலிடம் வென்ற பூலாம்பாடி தீரன் அணியினருக்கு ரூ.30,000மும், இரண்டாமிடம் வென்ற க.எறையூர் அணியினருக்கு ரூ.24,000மும், மூன்றாமிடம் வென்ற அம்மாபாளையம் சஹாரா அணியினருக்கு ரூ.15,000 மும்,
கையுந்துப்பந்து போட்டியில் முதலிடம் வென்ற சு.ஆடுதுறை அணியினருக்கு ரூ.30,000மும், இரண்டாமிடம் வென்ற திருமாந்துறை அணியினருக்கு ரூ.18,000மும், மூன்றாமிடம் வென்ற கொளக்காநத்தம் மணி பிரதர்ஸ் அணியினருக்கு ரூ.12,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சு.தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புவனேஸ்வரி, டேக்வோண்டோ பயிற்றுநர்பரணி தேவி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
