கன்னியாகுமரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!
பொதுமக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும்போது, நாளுக்குநாள் வாகன நெரிசல் ஏற்படுவதாலும், தொலை தூரங்களுக்கு செல்ல சுற்றுப்பாதையினை பயன்படுத்துவதாலும், பயணத்தின் நேரம் அதிகமாகிறது!
இதனால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தேரி வழித்தடத்தில் 4 வழிப்பாதையின் ஒரு பகுதியாக புத்தேரி குளத்தின் குறுக்கே ஒரு பெரிய பாலம், முன்மொழியப்பட்டுள்ளதோடு, 500 மீட்டர் நீளம் கொண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, வேலையாட்களிடம் உங்களுக்கு ஏதாவது குறைபாடுகள், தடங்கல்கள் இருக்கின்றதா என்று கேட்டறிந்து அதை சரி செய்து தருவதாகவும் கூறினார்..
