திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (30.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி, வேளாண்மை துறை இணை இயக்குநர் திருமதி.வசந்தா, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு.அரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.ஜெயராணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.சரண்யா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.கந்தசாமி, உள்ளிட்ட அரசுத்துறைகளின் உயர் அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.