பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.அருண்நேரு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் கண்காணிப்புக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.அருண்நேரு தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. முன்னிலையில் இன்று (18.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிதனர்.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், மத்திய நிதிக்குழு மானியம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், பி.எம்.கிசான் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டத்தின் மூலம் என்னென்ன பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறித்தும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார் மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைதுறை, பள்ளிக்கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன் பெற்ற பயனாளிகளின் விபரங்கள், எவ்வாறு பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்தும், ஒவ்வொரு திட்டத்திற்குமான இலக்கீடுகள் முழுமையாக எய்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார் பின்னர் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அலுவலர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் மற்றும் தேவைகள் அனுமதி இருப்பின் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை நான் விரைந்து மேற்கொண்டு தீர்வு காண முடியும். ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒதுக்கப்படும் பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் அந்த நிதியாண்டிற்குள் முடித்து பொதுமக்கள் பயனடைய செய்ய வேண்டும் அரசின் அனைத்து திட்டங்களிலும் தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து வழங்கிட வேண்டும் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது ஆகையால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்களை விரிவுபடுத்தும் தொழில் முன்னோடிகளுக்கு தொழிற்சார்ந்த ஒன்றிய மாநில அரசின் கடன் உதவி திட்டங்களில் அதிக அளவில் கடனுதவிகளை வழங்கி சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.
இன்றைய சூழலில் தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்துவிட்டு நாம் பயணம் செய்ய முடியாது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். தேசியநெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையினை அளித்தால் இதுகுறித்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து அத்திட்டங்களை செயல்படுத்தநடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய்அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)வைத்தியநாதன், ஆட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்