குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றது.
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றது.
சங்கத்தலைவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்,சுப்ரமணி வரவேற்றார்.செயலாளர் ஆல்துரை ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
பொருளாளர் கய்யும்பாஷா வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.கூட்டத்தில்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கும் நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்காமல் குறைந்து போனது.இது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.40ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள பள்ளிக்கு 9.15 மணிக்கு செல்லவேண்டிய மாணவர்கள் காலை உணவை உட்கொள்ள முடியாமல் அதிகாலை 7மணிக்குமுன்பு புறப்பட்டு செல்கின்றனர்.இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் மாலை நேரங்களில் வனவிலங்குகள் இருக்கும் பாதையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நீலகிரி மாவட்ட பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் குழு ஒன்று அமைத்து விரிவான ஆய்வு செய்து மலை மாவட்ட மக்களின் தேவைக்கேற்ப கூடுதலான பேருந்துகள் இயக்கவும்,பேருந்துகள் தேவைப்படும் கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களை உருவாக்கவும் அரசை கேட்டுக் கொள்வது.

