கட்டிடம் திறக்கப்பட்ட 4, நாட்களில் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு,

கட்டிடம் திறக்கப்பட்ட 4, நாட்களில் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோயில் ஊராட்சியில் 2024-2025 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு நான்கு நாட்களே ஆன சூரியனார் கோயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்