ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் சர்வதேசிய யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (ம) நாட்டு நலத்திட்டம் இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் சர்வதேசிய யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (ம) நாட்டு நலத்திட்டம் இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான முனைவர் தவசிலிங்கம் யோகா குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு சொற்பொழிவாற்றினார், மற்ற உடற்பயிற்சிகள் உடல் நலத்தை மட்டும் பேணிக்காக்கும் ஆனால் யோகா பயிற்சி உடல் நலத்தை பேணுவதோடு மட்டுமல்லாது மனவளத்தையும் பேணி காக்க வல்லது என்று உரையாற்றி மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளையும் வழங்கினார் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் சுலைமான் , சதாம் உசைன், முனிய சத்தியா ஆகியோர் செய்திருந்தனர் இவ்விழாவில் துறை தலைவர் ஜேசுதுரை உள்ளிட்ட துறை தலைவர்களும் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் கல்லூரி அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
