மதுரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா.
மதுரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இளைய தளபதி விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து இனிப்புடன் மாபெரும் அன்னதானம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பஞ்சு மெத்தை, பிரட்,பால்,பிஸ்கட் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் சவரி மற்றும் நரேன் ஆகியோர் சிறப்பு கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுராந்தகம் நகரத் தலைவர் பெருமாள் வெகு சிறப்பாக செய்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் லோகு கார்த்திக் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
