ஆற்றில் குளித்த இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்.

ஆற்றில் குளித்த இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் வயது 25. இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் இன்று மதியம் ஏராகரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக ராஜேஷ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ராஜேஷைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்