பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனூர், துங்கபுரம், வேப்பூர், பரவாய், கல்லை, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டிணம், வயலப்பாடி, வ.கீரனூர், வீரமநல்லூர், வேள்விமங்கலம், ரெட்டிக்குடிக்காடு, வசிஷ்டபுரம் ஆகிய கிராமங்களில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (22.06.2025) ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கிராமப்புற பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை திட்டங்களாக வழங்கி வருகின்றார்.இன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் வேப்பூர், கல்லை, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டிணம், வயலப்பாடி, வ.கீரனூர், வீரமநல்லூர் ஆகிய இடங்களில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, குன்னம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தேனூர் மின் அலுவலகம் அருகிலும், துங்கபுரம் – அண்ணாநகர் குடியிருப்பு பகுதியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அருகிலும் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் தேனூர் கிராமத்தில் ரூ.6.73 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் 95 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, துங்கபுரம் ஊராட்சி அண்ணா நகரில் ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் 47 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, வ.கீரனூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல், மோட்டார் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி, ரெட்டிக்குடி காடு கிராமத்தில் ரூ.6.39 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 142 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, வேள்விமங்கலம் சாலை கீழப்பெரம்பலூர் – திடீர் குப்பம் சாலை வழி பெருமாள் கோவில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வயலப்பாடி ஊராட்சியில் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, வயலப்பாடி ஊராட்சியில் ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் கொடுக்கான் குளம் தூர்வாரும் பணி, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் துங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஆண்கள்) ரூ.7.78 லட்சம் மதிப்பிட்டிலும், வேள்விமங்கலம் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பிட்டிலும், கோவிந்தராஜ பட்டினம் – பூங்கா நகரில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டிலும், சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி,முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பரவாய் முதல்ஆண்டிக்குரும்பலூர் வரை ரூ.149.13 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, என மொத்தம் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேப்பூரில் முழு நேர நியாய விலை கடையும், கல்லை கிராமத்தில் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடமும், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வசிஷ்டபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால்குளிரூட்டும் மையம் என மொத்தம் ரூ30.59 லட்சம் மதிப்பீட்டிலான 3பணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த பால் குளிரூட்டும் மையத்திற்கு புதியதாக 63KV புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தடையின்றி மின்சார சேவை வழங்கிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இன்று மட்டும் ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன மேலும் குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இதுபோன்று குன்னம் சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் கோரிக்கை அடிப்படையிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. சு.தேவநாதன், வருவாய் அலுவலர்/ திருச்சி ஆவின் பொது மேலாளர் திருமதி.எஸ்.முத்துமாரி, துணை பதிவாளர் (பால்வளம்) திரு.நாராயணசாமி, பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் திரு.சிவக்குமார் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அறிவழகன், திரு.சேகர், குன்னம் வட்டாட்சியர் திரு.சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
