ராமநாதபுரம் மாவட்டம்,தெற்கு நகர திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா,திராவிட மாடல அரசின் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இளைஞரணி அமைப்பாளர் கோபிநாதன் அய்யாவுவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர்.எஸ்.ரமேஷ் கண்ணா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் திமுக இளம் பேச்சாளர் காயத்ரி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை
எடுத்துரைத்தார். வடக்கு நகர கழக செயலாளரும் ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவருமான ஆர்.கே.கார்மேகம், தெற்கு நகர் கழக செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான டி.ஆர்..பிரவீன் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா அகமது தம்பி உள்ளிட்டோர் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தனர்.
இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஸ் சர்மா நன்றியுரை கூற தெருமுனை பிரச்சாரக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்திகள்