சென் கொலம்பஸ் பள்ளியில்ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் இனாட்டா பவுண்டேஷன் ஏபிஜே அப்துல் கலாம் இணைந்து மாணவர்களுக்கு ரத்த வகை பரிசோதனை முகாம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் சென் கொலம்பஸ் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ரத்த வகை பரிசோதனை இனாட்டா பவுண்டேஷன் பயிற்சியாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகளுக்கு ரத்த பரிசோதனை செய்து அவர்களுடைய எந்த வகை ரத்தம் என்பது தெரியப்படுத்தப்பட்டது பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்தியாவில் நாள்தோறும் நடைபெறும் விபத்துகளால் ரத்தம் அதிகமாக தேவைப்படுவதால் எந்த வகை ரத்தம் என்பது தெரிந்து வைத்திருந்தால் ரத்தம் அளிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் பல உயிர்களை காக்க உதவும்எனவும் மேலும் பி.வி. களத்தூர் பகுதியை சேர்ந்த சிறந்த சமூக சேவகர் ஆர் விஜயகுமார் அவர்கள் 46 முறை ரத்ததான வழங்கி சாதனை படைத்த வருகிறார் அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் இனாட்டா பவுண்டேஷன் சார்பில் பரஞ்சோதி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் நிகழ்ச்சியில் ஏ. பி ஜே அப்துல் கலாம் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் சாலவாக்கம் குறும்பிரை வினோத்குமார் பி.வி களத்தூர் பகுதியை சேர்ந்த சிறந்த சமூக ஆர்வலர் ஆர் விஜயகுமார் ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் நிறுவனர் விக்னேஸ்வரன் சாலவாக்கம் தர்மன் இனாட்டா பவுண்டேஷன் ஜெயச்சந்திரன்மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
