கமுதி அருகே அபிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 9-வது வார்டு முதல்
18-வது வார்டு வரையிலான பகுதி மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று அகத்தாரிருப்பு பகுதியில் நடைபெற்று,
பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ஸ்ரீராம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன், பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் மாரி,செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், வேலவன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், பூரணிமா, பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ராமலெட்சுமி,
மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டா மாறுதல் உத்தரவு 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. மேலும்
மகளிர் உரிமைத் தொகை
பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 310 மனுக்கள்
பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது.