மதுராந்தகம் போக்குவரத்து பணியாளர்கள் பணி ஆணை வழங்கும் விழா…
மதுராந்தகம் போக்குவரத்து பணியாளர்கள் பணி ஆணை வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனையில் விழுப்புரம் கோட்டம் அனைத்து மண்டல பணிமனைகளில் பணியின் போது உயிர் இழந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் கோட்ட மேலாள் இயக்குனர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாரிசுதாரர்கள் 19 பேருக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் சுதாகர், ரவி, முரளி, தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சாலை விபத்து கண்காணிப்பு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, அரசு பேருந்துகளில் திருக்குறள் ஸ்டிக்கரை ஓட்டுனர். பணிமனை ஊழியர்கள் அலுவலர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் இறுதியாக சோமு அனைவருக்கும் நன்றி கூறினார். தேசிய கீதம் பாடப்பட்டது விழா இனிதே நிறைவுற்றது.