சாயல்குடி பெரியகுளம் கிராமத்திற்கு அடிப்படை வசதிவேண்டி எம்பியிடம்கோரிக்கை மனு
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் மாமுனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை அன்று இரவு பூக்குழி திருவிழா நடைபெறும். இவ்விழா பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சாயல்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து பாத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சாதி, மத பேதமின்றி கலந்துகொள்வதால் இது மத நல்லிணக்க விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் பொது மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பெரியகுளம் கிராமத்தில் மாமுனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என பெரியகுளம் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி அவர்களின் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
