மத்திய கூட்டுறவு வங்கி தொழில் தொடங்க கடனுதவி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஃ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பயனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., உட்பட பலர் உள்ளனர்.